சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? | நாளைய படங்களின் வெளியீட்டில் ஒரு அபூர்வம் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சர்கார்'. கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில், முதலமைச்சர் வேடத்தில் நடிக்கும் பழ.கருப்பையாவின் மகளாக நடித்துள்ளார் வரலட்சுமி சரத்குமார்.
'சர்கார்' படப்பிடிப்பு கடந்த 2-ம் தேதி நிறைவடைந்தது. பிரபல கல்லூரியில் நடைபெற்ற கடைசிநாள் படப்பிடிப்பில் வரலட்சுமி பங்கேற்று நடித்தார். படப்பிடிப்பு முடிவந்த அடுத்தநாளே, டப்பிங் பேசத் தொடங்கினார் வரலட்சுமி.
இரண்டே நாட்களில் தான் பேச வேண்டிய காட்சிகளுக்கான டப்பிங்கை பேசி முடித்துவிட்டார். இந்த தகவலை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் வரலட்சுமி.
“சர்கார் டப்பிங் முடிந்தது. உங்களுடன் பணியாற்றியதில் மிகுந்த மகிழ்ச்சி. நான் இதுவரை பணியாற்றியதிலேயே மிகவும் அழகான, இனிமையான இயக்குநர் நீங்கள் தான். எப்போதுமே அமைதியாக இருக்கும் குணம் கொண்டவர். இந்தப் பயணத்தில் நானும் ஒரு அங்கமாக இருந்ததில் மகிழ்ச்சி” என பதிவிட்டுள்ள வரலட்சுமி சரத்குமார், ஏ.ஆர்.முருகதாஸுடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.