தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நான்காவது முறையாக அஜித்தை வைத்து சிவா இயக்கி வரும் படம் 'விஸ்வாசம்'. அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான 'விவேகம்' படத்தைத் தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ்க்கு இந்தப்படம் அவ்வளவாக லாபம் தரவில்லை. இதனால் இந்த நிறுவனத்திற்கு மீண்டும் படம் தந்தார் அஜித்.
அதன்படி விஸ்வாசம் உருவாகி வருகிறது. இரு வேடங்களில் அஜித் நடிப்பதாக சொல்லப்படும் இந்தப்படத்தில், நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். தவிர, விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு என நான்கு காமெடியன்கள் நடிக்கின்றனர்.
தேனியைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் இப்படத்தின் கதை நிகழ்வது போல் அமைக்கப்பட்டுள்ளது. கதை நிகழும் தேனி பகுதியில் படப்பிடிப்பு நடத்தினால் ரசிகர்கள் தொல்லை கொடுப்பார்கள் என்று சொன்ன அஜித், அதனாலேயே இந்தப்படத்தின் படப்பிடிப்பை ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியிலும், வெளிப்புறக்காட்சிகளை ராஜமுந்திரியிலும் எடுக்கும்படி பணித்திருக்கிறார்.
அதன்படி 90 சதவிகித காட்சிகளை ஆந்திராவிலேயே படமாக்கிவிட்டனர். இந்நிலையில், இந்த மாத இறுதியுடன் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஒருவேளை படப்பிடிப்பு முடியவில்லை என்றால் அக்டோபர் முதல் வாரத்தில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க வேண்டும் என்று இயக்குநர் சிவாவுக்கு, சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் உத்தரவிட்டிருக்கிறாராம்.