தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கயல் படத்திற்கு பிறகு சண்டி வீரன், த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, கடவுள் இருக்கான் குமாரு, மன்னார் வகையறா என பல படங்களில் நடித்தவர் ஆனந்தி. தற்போது, பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள, பரியேறும் பெருமாள் படத்தில் நடித்துள்ளார்.
திருநெல்வேலி மண்வாசனை கதையில் தயாராகியுள்ள இந்த படத்தை ராமின் உதவியாளர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். கதிர் நாயகனாக நடித்துள்ளார். பரியேறும் பெருமாள் படத்தில் வித்தியாசமான வேடம் என்பதோடு, அழுத்தமான வேடம் என்று கூறும் ஆனந்தி, இந்தப்படத்தில் அவரே டப்பிங்கும் பேசியிருக்கிறார். இதற்காக பயிற்சியும் எடுத்து உள்ளார். மேலும் இனிமேல் தான் நடிக்கும் படங்களில் அவரே டப்பிங் பேசவும் திட்டமிட்டுள்ளார்.