தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஜோக்கர் படத்திற்காக சிறந்த பாடகருக்கான தேசிய விருது பெற்றவர் சுந்தரய்யர். ஜாஸ்மின் என்ற பாடலை பாடியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அதே படத்தில் இடம்பெற்ற எனங்க சார் உங்க சட்டம் பாடலையும் இவர்தான் பாடியிருந்தார். தெருப்பாடகராக இருந்து சினிமா பாடகர் ஆனவர்.
தேசிய விருது வாங்கியதால் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் என்று சொந்த ஊரான தர்மபுரியில் இருந்து குடும்பத்துடன் சென்னை வந்தார். ஆனால் வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது வறுமையில் வாடுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரது பேஸ்புக் பதிவு ஒன்று நேற்று வெளியாகி பரபரப்பு கிளப்பியது. அந்த பதிவு வருமாறு:
தர்மபுரியில் பிறந்திருக்க கூடாது. தமிழ்நாட்டில் பிறந்திருக்க கூடாது. முக்கியமாக தமிழனாக பிறந்திருக்க கூடாது. தேசிய விருது வாங்கிய வருடமே வறுமையில் இருந்த பாடகர் நானாகத்தான் இருக்கும். எல்லா மொழிகாரனையும் வாழ வைக்கும் சென்னை என்னையும் வாழ வைக்காதா?
இதோ வந்து 15 நாள் ஆகிறது. என் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க பணம் தேவை. ஒன்று பாட வாய்ப்பு கொடுங்கள் அல்லது பணம் கொடுங்கள் என்று கெஞ்சி 200 பேருக்காவது செய்தி அனுப்பி இருப்பேன். இதில் இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள் , தயாரிப்பாளர்கள், பெரும் பணம் படைத்தவர்கள், என்னுடைய 20 வருட நண்பர்கள். தேசிய விருது வாங்கிய பிறகு தேன் ஒழுக பேசியவர்கள், எப்போது வேணுமாலும் கேளுங்கள் என்று சொன்னவர்கள் எல்லோரும் அடங்குவர்.
இவர்கள் இப்போது வரைக்கும் யாரும் வாய்ப்பும் தரவில்லை. பணமும் போடவில்லை. என்னிடம் பழகாத நண்பர் தீபன் அவர்கள் முதன்முதலாக 1000 ரூபாய் சேமிப்பு கணக்கில் போட்டிருக்கிறார். நான் இப்போது இருக்கும் நிலைக்கு ஒரு கோடிக்கு சமம். அதே போல் அவருக்கு செய்தி அனுப்பவில்லை. யார் மூலமாகவோ என்னை பற்றி அறிந்து என்னிடம் தொலைபேசியில் கூப்பிட்டு என்னிடம் கோபப்பட்டார் ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று. நண்பர் வேலூரை சேர்ந்த சீனிவாசன் அவர்கள். என் இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவினை ஏற்பதாக சொல்லியிருக்கிறார். என் வாழ்க்கையில் மறக்க முடியாத முடியாத மனிதர்கள் ஆகிவிட்டார்கள். நன்றிகள் பல.