டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மாநாடு படத்தை முடித்துக் கொடுத்த பின், இயக்குநர் சுந்தர் சி படத்தில் நடிக்க நடிகர் சிம்பு ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் முதல் ஹீரோயினாக மேகா ஆகாஷ் நடிக்க ஒப்புக் கொள்ள, இரண்டாவது ஹீரோயினாக தமண்ணாவை நடிக்க வைக்கலாம் என முடிவெடுத்தார் சுந்தர் சி.
ஆனால், AAA படத்தின் போது தனக்கும் தமண்ணாவுக்கும் லேசான பிரச்னை ஏற்பட்டது என, சுந்தர் சி-யிடம் சிம்பு கூறியுள்ளார். அதனால், தமண்ணாவிடம் பேசி பிரச்னையை சரி செய்த பின், இருவரும் மீண்டும் சேர்ந்து நடிக்கலாம் என அவர் சொல்ல, இருவருக்கும் இடையில் இருந்த சண்டையை சமரசம் செய்து வைத்து இருக்கிறார் சுந்தர் சி. இதையடுத்து, சுந்தர் சி-யின் புதிய படத்தில் சிம்புவும், தமண்ணாவும் சேர்ந்து நடிக்க உள்ளனர்.