ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் பேட்ட படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் ரஜினியுடன் விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா என இளம் நடிகர் பட்டாளத்தையே களம் இறக்கியுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்..
அந்தவகையில் மலையாளத்தில் இருந்து மணிகண்ட ஆச்சாரி என்பவரை இந்தப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்க அழைத்து வந்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ். மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வித்தியாசமான கதையம்சத்துடன் வெளியாகி பாராட்டு பெற்ற கம்மட்டிப்பாடம் படத்தில் கவனித்தக்க அறிமுகமாக உள்ளே நுழைந்தவர் தான் இந்த மணிகண்ட ஆச்சாரி.
தற்போது லக்னோவில் நடைபெற்று வரும் பேட்ட படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் சேதுபதியுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள மணிகண்ட ஆச்சாரி, வெள்ள பாதிப்பின்போது கேரளாவிற்கு உதவி செய்த விஜய்சேதுபதிக்கு கேரளா மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.