'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
முன்பெல்லாம் திரைப்படங்கள் நூறு நாட்களுக்கு மேலாக ஓடும். சமீபகாலமாக ஒரு வாரம் இரண்டு வாரம் ஓடுவதென்பதே அரிதாகி விட்டது. திருட்டு விசிடிக்கள் மற்றும் இணைய தளங்களில் புதிய படங்கள் உடனடியாக வெளியாகி விடுவதால், ஓரிரு வாரங்களில் படங்களை திரையிட்டு, போட்ட பணத்தை எடுத்தாக வேண்டிய கட்டாய சூழலும் தயாரிப்பாளர்களுக்கு உருவாகியிருக்கிறது.
இதன்காரணமாக, சினிமாத் தொழில் நலிவடைந்து வருவதாகவும், சினிமா படிப்படியாக அழிந்து விடும் என்றும் சிலர் விரக்தியில் பேசுகிறார்கள். ஆனால் இதுபற்றி தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கூறுகையில், சினிமாவை யாராலும் அழிக்க முடியாது. ஆங்காங்கே தியேட்டர்களை இடித்து விட்டு மால் கட்டுவதாக சொல்கிறார்கள்.
ஆனால், ஒரு தியேட்டரை இடித்தால் அதே இடத்தில் நான்கு தியேட்டர்கள் வருகிறது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் பார்க்கையில் இந்த ஆண்டில் மட்டும் புதிதாக 160 புதிய ஸ்கிரீன் உருவாகியிருக்கிறது. ஆக, சினிமா இப்போது தான் நன்றாக உள்ளது. நாளுக்கு நாள் இது வளருமே தவிர, யாராலும் அழிக்க முடியாது என்கிறார் தேனப்பன்.