பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
பிசியாக நடித்து வரும் ஒரு காமெடியன் தான் யோகிபாபு. ஒவ்வொரு படங்களிலுமே காமெடியன் பட்டியலில் யோகிபாபுவின் பெயர் தான் முதலில் இடம் பெறுகிறது. அவரது கால்சீட் கிடைக்கவில்லை என்கிற பட்சத்தில் தான் மற்ற காமெடியனை தேடிச் செல்கிறார்கள். அந்த வகையில் இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை யோகிபாபுவின் கால்சீட் டைரி புல்லாகியிருக்கிறது.
இதுபற்றி அவர் கூறுகையில், என்னைத்தேடி வரும் யாரையும் ஏமாற்ற நான் விரும்பவில்லை. ஆனபோதும் கால்சீட் இல்லாதபோது பல கம்பெனிகளை திருப்பி அனுப்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது. அந்த வகையில், இப்போது ஒருநாள்கூட எனக்கு ஓய்வில்லை. இரவு பகலாக நடித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறும் யோகிபாபு, தூங்குவதற்கு கூட நேரம் கிடைக்காததால் கேரவனுக்குள் அவ்வப்போது குட்டித்தூக்கம் போடுகிறேன்.
காமெடி ரசிகர்களை சிரிக்க வைப்பதற்கு என்றபோதும், கொஞ்சம் அழுத்தமான பர்பாமென்ஸ் கொடுக்கும்போது ஒரு நடிகனாய் எனக்கு திருப்தி கிடைக்கிறது என்கிறார் யோகிபாபு.