தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
திருடன் போலீஸ்', 'ஒரு நாள் கூத்து', 'புரூஸ்லீ' போன்ற படங்களை தயாரித்த பட நிறுவனம் 'கெனன்யா பிலிம்ஸ்'. சந்தானம் நடிப்பில் இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான 'சர்வர் சுந்தரம்' படம் கிடப்பில் கிடக்கிறது. 'சர்வர் சுந்தரம்' படத்தை விரைவில் வெளியிட முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்தப்படம் தவிர, துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கும் 'வான்' என்ற படத்தையும் கெனன்யா பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இந்த இரண்டு படங்களை தொடர்ந்து 'ஜாக்' என்ற படத்தை தயாரிக்கிறது 'கெனன்யா பிலிம்ஸ்'.
நாயை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தை, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் 'புரூஸ்லீ' படத்தை இயக்கிய பிரசாந்த் பாண்டிராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக அசோக் செல்வன் நடிக்கிறார். இராணுவ நடவடிக்கைகளை மையப்படுத்திய படமாம் இது.
திடீரென நாயை மையப்படுத்திய கதையை படமாக்குவது ஏன்? மிருகங்களை வைத்து எடுக்கப்படும் படங்களின் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் பெரிய விலைக்கு வாங்கப்படுகிறது. அதன் காரணமாகவே ஜாக் படம் தொடங்கப்பட்டுள்ளது.
ஜீவா நடித்த கீ படத்தின் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் லட்சங்களில் விலைபோனது. அதே ஜீவாவின் நடிப்பில் தயாராகி வரும் மற்றொரு படமான கொரில்லா படத்தின் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் கோடிகளில் விலைபோனது.
இப்ப புரியுதா விஷயம்?