'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல பாலிவுட் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் அனுராக் காஷ்யப். இமைக்கா நொடிகள் படத்தில் ருத்ரா என்ற சைக்கோ வில்லனாக நடித்தார். படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், பேசியதாவது :
ருத்ராவுக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் அனைத்தும் இயக்குனர் அஜய்க்கு தான் போய் சேர வேண்டும். அஜய், என்னை எமோஷனலாக அணுகினார். படத்தில் நடிக்க வந்த பிறகு பல நேரங்களில் ஷுட்டிங் நடக்க முடியாமல் தள்ளிப்போனது. 2 ஆண்டுகளாக இந்த படம் தயாரிப்பில் இருந்தது, அந்த நேரத்தில் கிடைத்த இடைவெளியில் நான் 2 படங்கள், 1 வெப் சீரீஸ் இயக்கி விட்டு வந்தேன். அஜய் இன்னும் பெரிய உயரத்தை அடைவார். மகிழ் திருமேனிதான் ருத்ராவுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
நல்ல கதையும் கேரக்டரும் அமைந்தால் மட்டுமே வில்லனாக நடிப்பேன். குறிப்பாக ரஜினிக்கு வில்லன் என்றால் சந்தோஷமாக நடிப்பேன். நடிப்பதை விட எனக்கு படம் இயக்குவதில் தான் மகிழ்ச்சி. விரைவில் நேரடி தமிழ் படம் ஒன்றை இயக்குவேன். என்றார் அனுராக் காஷ்யப்.