இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
புரூஸ்லீ படத்தை இயக்கிய பிரஷாந்த் பாண்டிராஜ் அடுத்ததாக ஜாக் என்கிற படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கிறார். இதில் நாய் ஒன்று முக்கிய கேரக்டராக இடம்பெறுகிறது.
இது ராணுவத்துக்கு பயிற்சி கொடுக்கப்பட்ட ஒரு நாயை பற்றிய கதை என்பதுடன் போர்க்காட்சிகளில் நாயகனுக்கும், நாய்க்கும் இடையே உள்ள பிணைப்பு தான் படத்தின் ஒரு முக்கிய ஹைலைட் என கூறியுள்ளார் இயக்குனர் பிரஷாந்த் பாண்டிராஜ்.
கடந்த மூன்று வருடங்களுக்கு முன் மலையாளத்தில் பிக்கெட்-43 என்கிற படம் வெளியானது. மேஜர் ரவி இயக்கிய இந்தப்படத்தில் கதை முழுவதுமே போர்க்கள காட்சிகளின் பின்னணியில் நிகழ்வது போல அமைக்கப்பட்டு இருந்தது. முக்கியமாக ராணுவ வீரரான பிருத்விராஜுக்கும், ஒரு நாய்க்குமான பாசப்பிணைப்பையும் நெகிழ்ச்சியாக காட்டியிருந்தார்கள்.
குறிப்பாக குண்டடிபட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படும் பிருத்விராஜ் திரும்பி வருவார் என அந்த நாய் காத்திருப்பதாகவும், கடைசியாக தனக்கிருந்த ஒரே உறவான தனது தாய் இறந்துவிட்ட நிலையில், தன்னை நேசிக்கும் உறவான அந்த நாய் இருக்கும் இடத்திற்கே மீண்டும் பணி செய்ய பிருத்விராஜ் கிளம்புகிறார் என க்ளைமாக்ஸை முடித்திருந்தார்கள் .
ஒருவேளை ஜாக் படம் பிக்கெட்-43 படத்தை தழுவி எடுக்கப்படுகிறதோ என்னவோ..? விரைவில் தெரியத்தான் போகிறது.