திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடி, தற்போது புரோ கபடி என்ற பெயரில் நவீன முறையில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக இது நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான புரோ கபடி போட்டிகள், அடுத்த மாதம் 5-ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இதில் விளையாடும் தமிழ் தலைவாஸ் அணியின் தூதராக நடிகர் விஜய் சேதுபதி நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று நடந்த அணியின் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு விஜய் சேதுபதி பேசியதாவது:
கபடி நம் தமிழர்களின் வீர விளையாட்டு. அது நம் பாரம்பரியத்தோடு கலந்த விளையாட்டு. புரோ கபடியின் மூலம் கபடி விளையாட்டை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெருமை அடைகிறேன். நம் விளையாட்டான கபடியை நாம் தான் மேம்படுத்த வேண்டும். நானும் விளையாட்டு மைதானத்துக்கு வந்து தமிழ்நாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துவேன். கிரிக்கெட்டையும் தாண்டி கபடியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். ஜெயிக்க வேண்டும். என்றார்.