ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
கடந்த சில மாதங்களுக்கு முன் கேரளாவையே அச்சுறுத்தியது நிபா வைரஸ். இந்த வைரஸ் பாதிப்பினால் கேரளாவில் சிலர் உயிரிழந்தனர். குறிப்பாக நர்ஸ் உமா என்பவர் மரணத்தை தழுவியது, மாநிலம் தாண்டி உலகம் முழுவதிலும் மிகப்பெரிய அதிர்ச்சியையும் அனுதாபத்தையும் ஏற்படுத்தியது..
இந்தநிகழ்வுகளின் அடிப்படையில் ஒரு படம் எடுக்க இருப்பதாக கூறிவந்த பிரபல மலையாள இயக்குனர் ஜெயராஜ், அதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தார். ஆனால் நேற்று இயக்குனர் ஆஷிக் அபு, இதே நிகழ்வுகளை வைத்து வைரஸ் என்கிற படத்தை இயக்கவுள்ளதாக, போஸ்டரை வெளியிட்டு நடிகர்களையும் அறிவித்தார்.
இதனால் இயக்குனர் ஜெயராஜ் அதிர்ச்சியடைந்தாலும், இந்த அறிவிப்பு வெளியான கொஞ்ச நேரத்திலேயே தான் இயக்கவுள்ள படத்தை கைவிடுவதாக மிகவும் பெருந்தன்மையுடன் அறிவித்துள்ளார். ஒரே கதையை இரண்டு பேர் எடுக்கும் போட்டி மனப்பான்மையால் இருதரப்பும் நஷ்டப்படுவதை தவிர்க்கும் விதமாகவே தான் தனது முயற்சியை கைவிட்டதாக கூறியுள்ளார் ஜெயராஜ்.