நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? |
சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் யுடர்ன். கன்னடத்தில் வெளியான இந்த படத்தின் தமிழ், தெலுங்கு ரீ-மேக்கையும் பவன்குமாரே இயக்கியிருக்கிறார். கன்னடத்தில் அவர் இயக்கிய லூசியாவிற்கு பிறகு இந்த யுடர்ன் படமும் வசூல் சாதனை செய்தது.
இந்த படத்தில் தான் நடித்த அனுபவத்தைப்பற்றி சமந்தா கூறுகையில், யுடர்ன் என்னை மிகவும் கவர்ந்த படம். நான் இந்த கதையில் நடிக்க விரும்பியதால் தான் ரீமேக் செய்யப்பட்டது. அதேசமயம், இந்த படத்தில் பணியாற்றியது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
ஒரு புதுமையான முறையில் காட்சிகளை படமாக்கினார் இயக்குனர். தியேட்டரில் படம் பார்ப்பவர்கள் இரண்டு நிமிடம் வெளியில் சென்று விட்டு தியேட்டருக்குள் வந்தால் கூட ரசிகர்களுக்கு புரியாது. அந்த அளவுக்கு கண்ணிமைக்காமல் கதையோடு ஒன்றி பார்க்க வேண்டிய படம் இது.
நிறைய விசயங்கள் புரியாமல் இயக்குநர் சொன்னது போலவே நடித்திருக்கிறோம். அதனால், ரசிகர்களுக்கு ஏதாவது புரியாத விசயங்கள் படத்தில் இருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. இயக்குநரே பொறுப்பு. அதனால் படத்தில் பிடிக்காத விசயங்கள் ஏதேனும் இருந்தால் என்னை திட்டாமல், இயக்குநரை திட்டுங்கள் என்று சிரித்தபடியே சொல்கிறார் சமந்தா.