'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் நடிகர்களில் தமிழ் உணர்வு மிக்கவர் ஜி.வி.பிரகாஷ்குமார். ஜல்லிக்கட்டு போராட்டம், அனிதா தற்கொலை, ஸ்டெர்லைட் போராட்டம், விவசாயிகள் போராட்டம், நீட் எதிர்ப்பு என பல்வேறு பிரச்னைகளின்போது மற்ற ஹீரோக்கள் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தபோது, எதைப்பற்றியும், யாரைப்பற்றியும் கவலைப்படாமல் துணிவுடன் களத்தில் இறங்கிக் குரல் கொடுத்தவர் ஜி.வி.பிரகாஷ்குமார்.
ஒக்கி புயலின்போது காணாமல் போன மீனவக் குடும்பங்களுக்கும், தமிழகத்தில் நலிவடைந்த நிலையில் உள்ள விவசாயிகளின் குடும்பங்களுக்கும் ஏராளமான உதவிகளைச் செய்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். அதுமட்டுமின்றி ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவிகள் உட்பட பல்வேறு சமூகப்பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்.
இந்நிலையில் மற்ற ஹீரோக்களுக்கு முன்மாதிரியான ஒரு விஷயத்தை செய்து அசர வைத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அதாவது, உலகம் வென்ற தமிழ், நமை கர்வம் கொள்ள வைத்த தமிழ், எனை ஆட்கொண்ட தமிழ்... இனி புதிய விதி செய்யும் என் “கையெழுத்துகள்” தமிழில் மட்டும் என்று உளமாற உறுதி ஏற்கிறேன் ... #தமிழ்விதியெனசெய் என்று தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளார். அதோடு தன்னுடைய தமிழ் கையெழுத்தையும் வெளியிட்டுள்ளார். ஜி.வி.பிரகாஷின் இந்த அறிவுப்புக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.