டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடவுளின் தேசம் என வர்ணிக்கப்பட்ட கேரளா, சமீபத்தில் பெய்த மழையால் நிலைக்குலைந்து போய் உள்ளது. நிலச்சரிவில் சிக்கி 350-க்கும் மேற்பட்டோர் பலியாகினர், லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். அங்கு இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி கொண்டிருக்கிறது.
பிரபல பாடகியான உஷா உதூப், கேரள வெள்ளத்தின் துயரத்தை உருக்கமான பாட்டாக பாடி வீடியோவாக வெளியிட்டுள்ளார். "என்டே கேரளா எத்ரே சங்கடம்..." என்ற அந்தப்பாடல் இணையதளங்களில் பிரபலமாகி உள்ளன.
இதுகுறித்து உஷா உதூப் கூறுகையில், கொச்சியில் ஏற்பட்ட பாதிப்புகள் என்னை மிகவும் பாதித்தது. கேரளாவிற்கு என்ன செய்யலாம் என மகளிடம் கேட்டேன். அவள் தான், சித்தூர் கோபியிடம் நான் பாடிய 'என்டே கேரளா' பாடலை தற்போதைய கேரளா பாதிப்புகளை விவரிக்கும் வகையில் எழுதித்தரும்படி கேட்குமாறு கூறினாள். இப்படித்தான் அந்தப்பாடல் உருவானது. கேரள மக்களுக்கு இந்தப்பாடலை சமர்ப்பிக்கிறேன் என உஷா உதூப் கூறியுள்ளார்.