'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படத்தில் அறிமுகமானவர் நரேன். அப்பா வேடங்கள் மட்டுமின்றி போலீஸ் வேடங்களிலும் அதிகமாக நடித்து வருகிறார். அதேப்போல் தற்போது பவன்குமார் இயக்கத்தில் சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள யுடர்ன் படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் ஆடுகளம் நரேன்.
இந்தப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகியிருப்பதால் தமிழ் பதிப்புக்கான காட்சியை எடுத்து முடித்ததும் அதே ஸ்பாட்டில் தெலுங்கு பதிப்பையும் படமாக்கியிருக்கிறார் இயக்குனர். ஆனால் ஆடுகளம் நரேனுக்கு தெலுங்கு தெரியாது என்பதால் தெலுங்கு வசனங்களை பேச தடுமாறியிருக்கிறார்.
அப்போது அவருடன் அதே படத்தில் இன்னொரு போலீஸ் அதிகாரியாக இணைந்து நடித்துள்ள ஆதி, நரேனுக்கு தெலுங்கு டயலாக்குகளை புரிய வைத்ததோடு, தைரியமா பேசுங்க சார் என்று உற்சாகம் கொடுத்து வந்திருக்கிறார். இப்படி கூறும் நரேன், யுடர்ன் படத்திற்கு பிறகு தமிழைப்போலவே தெலுங்கு படங்களில் நடிக்கவும் தனக்கு அதிகப்படியான வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக சொல்கிறார்.