தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது அமெரிக்காவில் தனது குழுவினருடன் இசை சுற்றுப் பயணம் செய்து வருகிறார். கடந்த 18ந் தேதி தொடங்கிய இந்த இசைப் பயணம், லாஸ் ஏஞ்சல்ஸ், அட்லாண்டா, வாஷிங்டன், உள்பட 9 நகரங்களில் நடந்தது.
இறுதி நிகழ்ச்சி வாஷிங்டனில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பாடகர்கள் மனோ, ஹரிச்சரன், நீத்தி மோகன், உதித் நாராயணன், ஜாவேத் அலி, ஆகியோர் கலந்து கொண்டு பாடினார்கள்.
நிகழ்ச்சியின் இறுதியில் தனது குழுவின் சார்பில் கேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்படும் என்று ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்தார். அரங்கத்தில் கூடியிருந்த அனைவரும் எழுந்து நின்று 5 நிமிடங்கள் வரை கைதட்டினார்கள். பின்னர் ஒரு கோடிக்கான காசோலையின் மாடலை தனது குழுவினருடன் இணைந்து காட்டினார். இந்த தொகை கேரள முதல்வர் பிரனாய் விஜயனுக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.
இதுதவிர கேரள மக்களின் வெள்ள நிவாரண நிதிக்கென்று தனி நிகழ்ச்சி ஒன்றையும் ரஹ்மான் நடத்துகிறார். வருகிற 9ந் தேதி புளோரிடா மாகாணத்தில் உள்ள ஓர்லாண்டோ நகரில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இதில் திரட்டப்படும் நிதி அனைத்தையும் கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்குகிறார் ரஹ்மான்.