ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவின் நம்பர் 1 நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா நடித்து அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளிவந்து ஆச்சரியப்பட வைத்துள்ளன. 'கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள்' ஆகிய இரண்டு படங்களிலும் நயன்தாரா தான் நாயகி, நாயகன் எல்லாமே. அவரை நம்பித்தான் இந்தப் படங்களின் வியாபாரம் சில பல கோடிகளுக்கு நடந்திருக்கிறது. தற்போது 'விஸ்வாசம், சிவகார்த்திகேயனுடன் ஒரு படம்' என இரண்டு படங்களில் மட்டுமே அவர் நடித்து வருகிறார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க 'கொலையுதிர் காலம்' படம் ஆரம்பமானது. ஆனால், அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து ஏன் நடக்கவில்லை என்பது ரகசியமாகவே இருக்கிறது. இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவின் தயாரிப்பில் முதன்முதலில் ஆரம்பமான படம் இதுதான். அதன்பிறகுதான் அவர் 'பியார் பிரேமா காதல்' படத்தைத் தயாரித்தார்.
கமல்ஹாசன் நடித்த 'உன்னைப் போல் ஒருவன்', அஜித் நடித்த 'பில்லா 2' ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டோலெட்டி தான் 'கொலையுதிர் காலம்' படத்தின் இயக்குனர். நயன்தாராவிற்கு தற்போது இருக்கும் வியாபாரத்தை வைத்தாவது அந்தப் படத்தை மீண்டும் ஆரம்பிப்பார்களா அல்லது அப்படியே கிடப்பில் போட்டுவிடுவார்களா என்பது இனிமேல்தான் தெரியும்.