மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் ராமர் பாலம் இருப்பது விஞ்ஞானபூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான் அந்த பாலத்தை உடைத்து சேதுகால்வாய் அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அதேப்போல இரு ஊர்களுக்கு இடையில் ஒரு பாலம் கட்ட பல பிரச்சினைகள். ஆனால் ஒரு காதலர்களால் அந்த பாலம் உருவாகிறது. இப்படி ஒரு கதையை கொண்டு உருவாகி இருக்கிறது ராமர் பாலம் என்ற படம்.
கர்ணன் மாரியப்பன் மற்றும் முருகேசன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் சமூக கண்ணோட்டத்துடன் கூடிய காதல் கதையாக உருவாகியுள்ளது. புதுமுகங்கள் மது மற்றும் நிகிதா ஜோடியாக நடித்துள்ளனர். நாயகியின் அண்ணனாக பீச்சாங்கை கார்த்திக் நடிக்க, கோகுல், கலைமாமணி பி.கைலாசம் மற்றும் பலர் நடித்துள்ளனர். கோபால் இசை அமைத்துள்ளார். ஆனந்த் சரவணன், காளிமுத்து ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
தயாரிப்பாளர்களில் ஒருவரான கர்ணன் மாரியப்பன் இயக்கியுள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது: ராமாயணத்தில் ராமர் சீதையின் மீது கொண்ட காதலால் ராமர் பாலம் உருவானது. அதேபோல தண்ணீர் நிறைந்து ஓடும் ஆற்றங்கரையில் உள்ள இரண்டு ஊர்களுக்கு இடையே பாலம் கட்ட நினைக்கிறார்கள் ஊர்மக்கள். ஆனால் அரசியல்வாதிகள், அதிகாரிகள் என முறையிட்டும் அது நடக்கவில்லை. ஆனால் ஒரு காதல் காரணமாக அந்த ஊருக்கு பாலம் வருகிறது.. அது எப்படி என்பதுதான் இந்தப்படத்தின் கதை. என்றார்.