அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
நடிகை ஸ்ரேயா, கொஞ்ச காலமாக தமிழ் பட உலகம் பக்கம் தென்படாமலேயே இருந்தார். காரணம், அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததுதான். நீண்ட இடைவெளிக்கு பின், 'நரகாசுரன்' படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். இந்தப் படத்தின் கதாநாயகன் அரவிந்தசாமி. மீண்டும், கோலிவுட்டுக்கு திரும்பி இருப்பது குறித்து, ஸ்ரேயா கூறியதாவது:
நடிகர் ரஜினியுடன் சேர்ந்து நடிப்பேன் என்று கனவிலும் நினைத்துப் பார்த்தது கிடையாது. ஆனால், சிவாஜி படத்தில் அவரோடு சேர்ந்து நடித்தேன். படபிடிப்பு முழுமையாக முடியும் வரையில் என்னால் நம்பவே முடியவில்லை. ரஜினியைப் பொறுத்த வரை, அவர் மிக எளிமையானவர் என கேள்விபட்டிருக்கிறேன். லைட்மேன் முதல் பெரிய நடிகர், -நடிகைகள் வரை எல்லோரையும் சமமாகவே மதிப்பார். அவரைப் போன்ற ஒருவரை வாழ்நாளில் சந்தித்தது இல்லை. அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன்.
நடிகைகள் பலரும் ஏற்கனவே அரசியலுக்கு வந்துள்ளார்கள். அவர்களில் சிலர் வெற்றியும் பெற்றுள்ளார்கள். ஆனால், அரசியலுக்கு நிறைய நெளிவு-சுளிவுகளும் சூட்சமங்களும் தேவை. அவை, எனக்கும் கொஞ்சமும் இல்லை என்பதால், நான் அரசியலுக்கு பொருத்தமாக இருக்க மாட்டேன் என்பது என்னுடைய முடிவு.
இவ்வாறு அவர் கூறினார்.