மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் |
கே.பாலசந்தரின் அரங்கேற்றம் படத்தில் தமிழில் அறிமுகமானவர் ஜெயசுதா. அதைத்தொடர்ந்து பெத்த மனம் பித்து, பாரத விலாஸ் என பல படங்களில் நடித்த அவர், அவ்வப்போது அம்மா கேரக்டரில் நடித்து வந்தார். நீண்ட இடைவேளைக்குப்பிறகு கார்த்தி நடித்த தோழா படத்தில் ரீ-என்ட்ரியானார்.
தற்போது மணிரத்னம் இயக்கியுள்ள செக்கச்சிவந்த வானம் படத்திலும் அவர் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரகாஷ்ராஜின் மனைவியாக அரவிந்த்சாமி, சிம்பு, அருண்விஜய் ஆகியோரின் அம்மாவாக நடித்துள்ளார்.
இதுபற்றி ஜெயசுதா அளித்துள்ள ஒரு பேட்டியில், 18 ஆண்டுகளுக்குப்பிறகு மணிரத்னம் படத்தில் நடித்துள்ளேன். அவரது படப்பிடிப்பு தளம் ஆரம்ப காலத்தில் இருந்தது போலவே இப்போதும் இருக்கிறது. அதோடு, ஒவ்வொரு காட்சிகளையுமே தனக்கான பாணியிலேயே படமாக்குகிறார். அந்த வகையில், அவரது தரம் அப்படியே மாறாமல் இருக்கிறது. தென்னிந்திய படங்கள் மட்டுமின்றி ஹிந்தி படங்கள் வரை நடித்துள்ள எனக்கு மீண்டும் மணிரத்தினம் படத்தில் நடித்தபோது ஒரு புதுமுக நடிகை போன்ற உணர்வு ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளார் ஜெயசுதா.
2000-மாவது ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த அலைபாயுதே படத்தில் நடித்திருந்தார் ஜெயசுதா.