ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
புதியவர்கள் இணைந்து உருவாக்கி உள்ள படம் இராஜாவின் பார்வை இராணியின் பக்கம். விகாஷ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் விகாஷ் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். சந்தான கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார், லியாண்டர் லீ மார்டின் இசை அமைத்துள்ளார். அழகுராஜ் இயக்கி உள்ளார்.
இதில் ஆதவா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். முதல் படத்திலேயே 8 பேக் வைத்து நடித்திருக்கிறார். மலையாள நடிகை அவந்திகா ஹீரோயின். இவர்களுடன் மதுமிதா, கானா உலகநாதன், சிங்கப்பூர் தீபன் நடித்திருக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் அழகுராஜ் கூறியதாவது:
தன்னை ஏமாற்றிய காதலியை பழிவாங்க ஒரு பெரிய டானின் உதவியை நாடிச்செல்கிறார் நாயகன். அதன்பின் நடக்கும் விஷயங்களை காமெடியாக சொல்லுகிறோம். கிளைமாக்ஸ் காட்சி யாரும் யூகிக்க முடியாத ஒன்றாக இருக்கும்.
கதைப்படி, படத்தில் நாயகன் 6 பேக்ஸ் உடல் கட்டுடன் இருக்க வேண்டும். ஆனால் நடிக்க தேர்வான ஆதவா 4 மாதம் கடுமையாக பயிற்சி எடுத்து 8 பேக்குடன் வந்து நின்றார். முன்னணி ஹீரோக்களுக்கு சவால்விடும் வகையில் சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். படம் வருகிற செப்டம்பர் 7 ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் நிச்சயம் ஒரு மறக்க முடியாத காமெடி அனுபவத்தை ரசிகர்களுக்கு தரும். என்றார் இயக்குனர் அழகுராஜா.