'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
சினிமா பிரபலங்கள் அரசியல் களத்தில் குதிப்பது புதிதல்ல, அந்தவகையில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர்., ஜெயலலிதா தொடங்கி, சமீபத்தில் குதித்த ரஜினி, கமல் வரை பலரை சொல்லலாம். இவர்கள் வழியில் அடுத்ததாக அரசியல் களத்தில் விஜய், விஷால் ஆகியோர் களமிறங்க உள்ள நிலையில் நடிகர் விஷால் இன்று(ஆக., 29) அதற்கான அச்சாரத்தை அமைத்துள்ளார்.
விஷாலுக்கு இன்று பிறந்தநாள். பிறந்தநாள் விழா, இரும்புத்திரை படத்தின் 100வது நாள் விழா, மற்றும் நற்பணி மன்றத்தை புதிய அமைப்பாக மாற்றுதல் என முப்பெரும் விழாவாக சென்னையில் இன்று கொண்டாடினர் விஷால். இதில், தன் புதிய அமைப்புக்கான பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்தினார்.
தன் இயக்கத்திற்கு மக்கள் நல இயக்கம் என பெயர் வைத்திருக்கிறார். கொடியின் மேலே விவேகம், வித்தியாசம், விடாமுயற்சி என்ற வாசகத்துடன் அன்னை தெரஸா மற்றும் அப்துல் கலாமின் உருவங்கள் இடம் பெற்றுள்ளன. கொடியின் மையத்தில் அணி சேர்வோம், அன்பை விதைப்போம் என அச்சிடப்பட்டுள்ளது. நடுவில் விஷாலின் முகம் வெற்றிக்கான குறி உடன் இடம் பெற்று இருக்கிறது.
விஷால் பேசியதாவது : அரசியல் என்பது மக்கள் பிரச்னையை தீர்ப்பது. ஆனால் அது ஒரு தொழிலாக மாறிவிட்டது. வீதியில் நடப்பதை பார்த்துவிட்டு சும்மா இருக்க முடியாது. அப்படி இருந்தால் அது பிணத்திற்கு சமம் என்றார்.