இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இந்த மாதத்தின் முதல் வாரத்தில் 10 படங்கள் வரை வெளிவந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. வாரத்துக்கு 4 படங்கள் தான் வெளிவர வேண்டும் என்கிற தயாரிப்பாளர் சங்க விதிமுறை என்ன ஆனது என்ற கேள்வி எழுந்தது. தயாரிப்பாளர் கில்டில் படத்தை பதிவு செய்திருப்பவர்கள் தயாரிப்பாளர் சங்கத்திற்கு கட்டுப்படவேண்டியதில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் மாதத்தின் இறுதி வாரமான அடுத்த வாரத்தில் 7 படங்கள் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நயன்தாரா, அதர்வா நடித்துள்ள இமைக்கா நொடிகள், பா.விஜய் தயாரித்து நடித்துள்ள ஆருத்ரா, தாமிரா இயக்கத்தில் சமுத்திரகனி நடித்துள்ள ஆண் தேவதை, தினேஷ் நடித்துள்ள அண்ணனுக்கு ஜே, அரவிந்த்சாமி நடித்துள்ளள நரகாசுரன், குரு சோமசுந்தரம் ஹீரோவாக நடித்துள்ள வஞ்சகர் உலகம், விக்ரம் பிரபு நடித்துள்ள 60 வயது மாநிறம் ஆகிய படங்கள் வெளிவருகின்றன.
அடுத்த வாரம் வெளிவரும் படங்கள் அனைத்துமே மீடியம் பட்ஜெட் படங்கள். ஒவ்வொரு படத்திற்கும் குறைந்த பட்சம் 200 தியேட்டர்களாவது வேண்டும். ஆனால் கிடைக்குமா என்று தெரியவில்லை. இதனால் கடைசி நேரத்தில் சில படங்கள் வெளியீட்டை தள்ளி வைக்கலாம் என்று தெரிகிறது. தயாரிப்பாளர் சங்கம், கில்டு, மற்றும சேம்பரை ஒருங்கிணைத்து வெளியீட்டை முறைப்படுத்தினால்தான் இந்த பிரச்சினை தீரும் என்கிறார்கள்.