தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்த கதாநாயகிகளில் அனுபமா பரமேஸ்வரனும் ஒருவர். தற்போது மலையாளம் தமிழில் பெரிய வாய்ப்பு இல்லாவிட்டாலும், தெலுங்கில் ஹலோ குரு ப்ரேமகோசமே போன்ற ஒன்றிரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் அனுபமா.
இந்தப்படத்தின் படப்பிடிப்புக்கு சற்று இடைவெளி விட்டிருந்த நேரத்தில் தான் கேரளாவிற்கு சென்றிருந்தார் அனுபமா. அந்த சமயத்தில் பெய்த மழையும் வெள்ளமும் காரணமாக தனது சொந்த ஊரான இரிஞ்சாலக்குடாவிலேயே தங்கிவிட்ட அனுபமா, அங்கே நிவாரண முகாம்களுக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வந்தார்
இந்த நிலையில் மீண்டும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு நடக்க இருப்பதாக அவருக்கு அழைப்பு வரவே, தனது சொந்த ஊரிலிருந்து சாலையில் ஏற்பட்டிருந்த தடைகளை எல்லாம் ஒரு வழியாக கடந்து ஐந்து மணிநேரத்தில் கோழிக்கோடு வந்து, அங்கிருந்து ஐதராபாத் பிளைட் பிடித்து ஷூட்டிங்கிற்கு சரியான நேரத்திற்கு சென்றாராம் படக்குழுவினர் அனுபமாவின் அர்ப்பணிப்பு உணர்வை மனதார பாராட்டி வருகிறார்கள்.