அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
பசங்க படத்தில் இயக்குனரானவர் பாண்டிராஜ். அதன்பிறகு வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க-2, இது நம்ம ஆளு, கடைக்குட்டி சிங்கம் என பல படங்களை இயக்கினார்.
இந்த படங்களில் அவர் மூன்றாவதாக இயக்கிய மெரினா படத்தில் தான் சிவகார்த்திகேயன் அறிமுகமானார். அதன்பிறகு அடுத்தடுத்து சில ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராகி விட்டார் சிவகார்த்திகேயன்.
இதுகுறித்து பாண்டிராஜ் கூறுகையில், நான் இதுவரை பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி விட்டேன். தேசிய விருது கூட வாங்கியிருக்கிறேன். ஆனபோதும், வெளியூர்களுக்கு செல்லும்போது என்னை இன்னும் மக்களுக்கு அடையாளம் தெரியவில்லை.
சிவகார்த்திகேயன் நடித்த மெரினா படத்தை இயக்கியவர் என்று தான் சொல்கிறார்கள். அந்த வகையில், நான் தான் சிவகார்த்திகேயனுக்கு சினிமாவில் ஒரு அடையாளம் கொடுத்தேன். ஆனால், மக்கள் மத்தியில் சிவகார்த்திகேயன்தான் எனக்கு முகவரியாக இருந்து வருகிறார் என்கிறார் பாண்டிராஜ்.