தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு 2019ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிப்பது, விற்பனை செய்வது, பயன்படுத்துவது போன்றவற்றை தடுக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையிலான இலாகா உருவாக்கப்பட்டுள்ளது.இது சம்பந்தமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு என்ற இணைய பக்கத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று திறந்து வைத்தார். அதோடு பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது, மறுசுழற்சி செய்வது போன்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் குறும் படங்களையும் வெளியிட்டார்.
பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு -என்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் விளம்பர தூதுவர்களாக நடிகர்கள் விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த ஆபத்தை மக்களுக்கு உணர்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசாரங்களில் இவர்கள் ஈடுபடப்போகிறார்கள்.