'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஒரு காலத்தில் வெற்றிப் பட ஹீரோயினாக இருந்தவர் சோனியா அகர்வால். அறிமுகப்படுத்திய செல்வராகவனை திருமணம் செய்து கொண்டு செட்டிலானவர், விவாகரத்தான பிறகு தனியாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார். விவாகரத்திற்கு பிறகு அவர் நடித்த படங்கள் எதுவும் கைகொடுக்கவில்லை. சின்னத்திரை சீரியல்களில் நடித்தார். இப்போது அதுவும் இல்லை. இந்த நிலையில் உன்னால் என்னால் என்ற படத்தின் மூலம் வில்லி அவதாரம் எடுத்துள்ளார்.
ஸ்ரீஸ்ரீ கணேசா கிரியேஷன் சார்பில் ராஜேந்திரன் சுப்பையா தயாரிக்கும் படம் இது. ஜெகா, உமேஷ் என்ற இரு புதுமுகங்கள் ஹீரோக்களாக அறிமுகமாகிறார்கள். லுப்னா, நிகாரிகா, சஹான என மூன்று ஹீரோயின்கள். இவர்கள் தவிர ராஜேஷ், ரவிமரியா, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். முகமது ரிஸ்வான் இசை அமைக்கிறார். கிச்சாஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:
பணம் என்பது இன்று எல்லோருக்கும் தேவையான ஒன்று தான். தேவைக்கு பணம் சேர்த்தால் பரவாயில்லை. ஆடம்பரத்துக்கும் பகட்டுக்கும் என்று சேர்க்க நினைத்தால் குறுக்கு வழிக்குத் தான் போக வேண்டும். மிகப் பெரிய பணக்காரர் ராஜேஷ், அவருக்கு செக்ரட்டியாக இருக்கும் சோனியா அகர்வால், ராஜேஷை கொலை செய்து விட்டு அந்த சொத்துக்கள் அனைத்தையும் அபகரிக்க திட்டமிடுகிறார். அந்த வலையில் வந்து சிக்குகிறார்கள் ஜெகா, உமேஷ் ஜெயகிருஷ்ணா மூவரும். இவர்களை வைத்து ராஜேஷை கொலை செய்ய சோனியா போட்ட சதி திட்டம் வெற்றி பெற்றதா இல்லையா என்பது தான் கதை.
இதை வேகமான திரைக்கதை மூலம் விறுவிறுப்பாக படமாக்கி உள்ளோம். அமைதியான கடலுக்குள் ஆக்ரோஷமான புயலும், பூகம்பமும் ஒளிந்திருக்கிறது. அது மாதிரி சோனியா அகர்வாலின் அமைதியான தோற்றத்தை மாற்றி வில்லியாக நடிக்க வைத்திருக்கிறோம். உன்னால் என்னால் படம் வித்தியாசமாக இருக்கும் என்றார் இயக்குனர்.