ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் |
தெலுங்கில் இளம் நடிகர்களுக்கு ஈடுகொடுத்து முன்னை விட ஆக்ரோஷமாக படங்களில் நடித்து வருகிறார் நடிகர் பாலகிருஷ்ணா. தற்போது தனது தந்தையின் வாழ்க்கை வரலாறாக உருவாகி வரும் என்.டி.ஆர். என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் சர்வதேச தரத்தில் பல ஏக்கர் பரப்பளவில் மிக பிரமாண்டமான ஸ்டுடியோ ஒன்றை அவர் உருவாக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே பாலகிருஷ்ணாவின் மனதில் இப்படி ஒரு திட்டம் இருந்து வந்துள்ளது.
சமீபத்தில் அரசு இதுபோன்ற திரைப்பட நகரங்களையும் ஸ்டுடியோக்களையும் உருவாக்க முன்வருபவர்களுக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் மானியங்களையும் வழங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து, பாலகிருஷ்ணா தான் ஏற்கனவே கிடப்பில் போட்டிருந்த இந்த திட்டத்தை தூசு தட்டப்போகிறாராம்.