தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கேரளா வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகளும், அது சம்பந்தப்பட்ட புகைப்படங்களும் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. அதில், நடிகர்கள் பிருத்விராஜ், இந்திரஜித் ஆகியோரின் அம்மா நடிகை மல்லிகா சுகுமாரன், ஒரு பெரிய அண்டாவில் வைத்து வெள்ளநீரில் காப்பாற்றப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
அதே சமயம், சில மாதங்களுக்கு முன்பு மல்லிகா சுகுமாரன் அவர் வசிக்கும் திருவனந்தபுரம் வீட்டுக்குச் செல்லும் சாலைகள் தன் மகன் பிருத்விராஜின் லம்போர்கினி கார் வர வசதியாக இல்லை என்று சொன்னதை இப்போது பெரிய சர்ச்சைக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். சாலைகள் சரியாக இல்லாததால் அந்த காருடன் மகன் இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று அவர் அப்போது பேசியிருக்கிறார். அந்த விஷயத்தையும், தற்போது அண்டாவில் அவர் காப்பாற்றப்பட்டதையும் சேர்த்து சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
இந்த சர்ச்சைக்கு மல்லிகா சுகுமாரன், “என்னைவிட வயதான, பாதிக்கப்பட்ட பல பெண்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களை யாரும் புகைப்படம் எடுத்துப் போடவில்லை,” என்று பதிலளித்திருக்கிறார்.
எவ்வளவு வசதியிருந்தாலும் இயற்கைக்கு முன் அனைவரும் சமம் என்பதை இப்படிப்பட்ட இயற்கை சீற்றங்கள்தான் புரிய வைக்கின்றன என்பதே பலரது கருத்தாக உள்ளது.