மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
உதயா நாயகனாக நடித்துள்ள படம் உத்தரவு மகாராஜா. இந்த படத்தில் பிரபு, கோவை சரளா, மனோபாலா, குட்டி பத்மினி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஆடியோ விழா நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், திரையுலகினர் திரளாக கலந்து கொண்டனர்.
18 ஆண்டுகளுக்குப்பிறகு நடிகை குட்டி பத்மினி இந்தப்படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக நடித்தவர் குட்டி பத்மினி. ஆனால் ஒரு கட்டத்தில் சின்னத்திரையில் நடிக்கத் தொடங்கிய அவர், தயாரிப்பாளராகவும் உயர்ந்தார். இந்நிலையில், தற்போது உதயா நடித்துள்ள உத்தரவு மகாராஜா என்ற படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் குட்டி பத்மினி.
இந்த படத்தில் நடித்தது பற்றி அவர் கூறுகையில், உத்தரவு மகாராஜா படத்தில் உதயாவின் அம்மாவாக நடித்துள்ளேன். கிராமத்தில் இஸ்திரி வண்டி தள்ளும் பெண் வேடம். ஏசியிலேயே இருந்து பழகிவிட்ட நான், இந்த படத்திற்காக வெயிலில் நின்று வியர்வை சிந்தி நடித்தேன். இனிமேல் நல்ல படங்கள் வந்தால் தொடர்ந்து நடிப்பேன் என்றார் குட்டி பத்மினி.
அதையடுத்து இந்த படத்தின் ஆடியோ விழாவுக்கு கடைக்குட்டி சிங்கம் கார்த்தியும் வந்திருந்தார். அப்போது அவரைப்பார்த்து, கார்த்திக்கு அம்மாவாக ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அந்த வாய்ப்பினை கார்த்தி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் மேடையில் நின்றபடியே அவரிடம் கேட்டுக் கொண்டார் குட்டி பத்மினி.