பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகர் சங்கத்தின் 65வது பொதுக்குழு நாளை(ஆக., 19) காமராஜர் அரங்கில் கூடுகிறது. இதற்கு முந்தைய பொதுக்குழுவை விட இந்தப் பொதுக்குழு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தற்போது நாசர் மற்றும் விஷால் தலைமையிலான நிர்வாகிகள் நடிகர் சங்கத்தில் பொறுப்பில் உள்ளனர். இவர்கள் பதவிக்கு வரும்போது அடுத்த தேர்தலுக்குள் சங்க கட்டிடத்தை கட்டிமுடிப்போம் என்று அறிவித்தனர்.
தற்போது கட்டட வேலை தொடங்கி விட்டாலும் பணிகள் இன்னும் முடியவில்லை. அதேப்போல நாடக நடிகர்களுக்கு அறிவித்த பல சலுகைகள் வழங்கப்படவில்லை. நீக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பொதுக்குழுவில் அனுமதி பெற வேண்டும். இப்படி பல பிரச்னைகள் பொதுக்குழுவிற்கு வருகிறது.
அதோடு இந்த பொதுக்குழுவில் தேர்தலை பற்றி முடிவு செய்தாக வேண்டும். கட்டட பணிகள் பாதியில் இருப்பதாலும், அறிவித்த திட்டங்கள் சில செயல்படுத்தப்படாமல் இருப்பதாலும் வருகிற தேர்தலிலும் விஷால் தலைமையிலான அணியினர் மீண்டும் போட்டியிடுகிறார்கள். இந்த நிலையில் தான் விஷாலால் திருட்டு விசிடி ஒழிப்பு பிரிவுக்கு நியமிக்கப்பட்ட ஒருவர் மீது பல கோடி ரூபாய் ஊழல் புகார் எழுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்தும் பொதுக்குழுவில் கேள்விகள் எழுப்பப்படும்.
நடிகர் சங்கத்தின் தேர்தலை நடத்த 20 லட்சம் வரை செலவாகிறது. தேர்தலை நடத்தாமல் நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்த பணம் மிச்சமாகும். அதை கட்டட பணிகளுக்கு பயன்படுத்தலாம் என்று விஷால் தரப்பு பொதுக்குழுவில் பேச இருப்பதாக தெரிகிறது.
ஆனால் தேர்தலில் போட்டியிட ஆர்வமாக உள்ள ஜே.கே.ரித்தீஷ், தலைமையிலானவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். ஜே.கே.ரித்தீசுக்கு சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட ராதராதவி, எஸ்.வி.சேகர், சரத்குமார் ஆகியோர் பின்புலமாக இருக்கிறார்கள். இவர்கள் துணையுடன் நாடக நடிகர்களின் ஆதரவை பெறும் பணகளில் இறங்கி இருக்கிறார் ஜே.கே.ரித்தீஷ்.
இப்படி பல பிரச்னைகளுடன் நாளை பொதுக்குழு கூடுகிறது. பொதுக்குழுவிற்கு பாதுகாப்பு கேட்டு போலீசாரிடம் மனு அளிக்கப்பட்டிருக்கிறது. படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.