பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் நடிக்கும் படம் பொன் மாணிக்கவேல். பிரபுதேவா உதவியாளர் ஏ.சி.முகில் இயக்குகிறார். இந்த படத்தின் டைட்டில் காவல்துறை அதிகாரி பொன் மாணிக்கவேல் பெயரில் இருப்பதால் இது அவருடைய கதையோ என்று சந்தேகம் உள்ளது. இதுகுறித்து இயக்குனர் ஏ.சி.முகில் கூறியதாவது:
எனது சொந்த ஊர் சேலம். சேலம் மாவட்டத்தில் காவல்துறை அதிகாரி பொன் மாணிக்கவேல் பணியாற்றினார். அவரது அதிரடி நடவடிக்கைகள் குறித்து அப்போது பெருமையாக பேசுவார்கள். அந்த பாதிப்பு தான் இந்தக் கதை உருவாக காரணம். படத்திற்கு முதலில் பொன்மனச் செம்மல் என்று டைட்டில் வைக்கலாம் என்றிருந்தேன். படத்தின் ஹீரோ பெயர் தான் பொன் மாணிக்கவேல். அதையே படத்துக்கும் வைத்து விட்டேன்.
பிரபுதேவா எப்படி போலீசாக நடிக்கிறார் என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கலாம். ஆனால் இந்த கதையை கேட்டவுடனேயே ஓகே சொன்ன அவர் அதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டு உடம்பை பிட்டாக மாற்றி போலீஸ் அதிகாரியாகவே மாறினார். நிவேதா பெத்துராஜ், அவரது மனைவி அன்பரசியாக நடிக்கிறார். போலீஸ் அதிகாரி மனைவி என்பதால் அவருக்கு பயந்து அடக்க ஒடுக்கமாக வீட்டுக்குள் வாழ்கிற பெண் அல்ல. தனது லட்சியத்துக்காக போராடுகிற பெண்ணாக நடிக்கிறார். என்றார்.