'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் நடிக்கும் படம் பொன் மாணிக்கவேல். பிரபுதேவா உதவியாளர் ஏ.சி.முகில் இயக்குகிறார். இந்த படத்தின் டைட்டில் காவல்துறை அதிகாரி பொன் மாணிக்கவேல் பெயரில் இருப்பதால் இது அவருடைய கதையோ என்று சந்தேகம் உள்ளது. இதுகுறித்து இயக்குனர் ஏ.சி.முகில் கூறியதாவது:
எனது சொந்த ஊர் சேலம். சேலம் மாவட்டத்தில் காவல்துறை அதிகாரி பொன் மாணிக்கவேல் பணியாற்றினார். அவரது அதிரடி நடவடிக்கைகள் குறித்து அப்போது பெருமையாக பேசுவார்கள். அந்த பாதிப்பு தான் இந்தக் கதை உருவாக காரணம். படத்திற்கு முதலில் பொன்மனச் செம்மல் என்று டைட்டில் வைக்கலாம் என்றிருந்தேன். படத்தின் ஹீரோ பெயர் தான் பொன் மாணிக்கவேல். அதையே படத்துக்கும் வைத்து விட்டேன்.
பிரபுதேவா எப்படி போலீசாக நடிக்கிறார் என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கலாம். ஆனால் இந்த கதையை கேட்டவுடனேயே ஓகே சொன்ன அவர் அதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டு உடம்பை பிட்டாக மாற்றி போலீஸ் அதிகாரியாகவே மாறினார். நிவேதா பெத்துராஜ், அவரது மனைவி அன்பரசியாக நடிக்கிறார். போலீஸ் அதிகாரி மனைவி என்பதால் அவருக்கு பயந்து அடக்க ஒடுக்கமாக வீட்டுக்குள் வாழ்கிற பெண் அல்ல. தனது லட்சியத்துக்காக போராடுகிற பெண்ணாக நடிக்கிறார். என்றார்.