டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் 50 பேர் பலியாகி உள்ளனர். மாநிலத்தில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன. இன்னும் பருவமழை பெய்து வருவதால் சேதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கேரள முதல்வரின் வெள்ள நிவாரணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் நிதி உதவி அளித்து வருகின்றனர். தமிழகத்தில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா உள்ளிட்ட பலர் நிதியுதவி அளித்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து நடிகை ரோகிணியும் ரூ.2 லட்சம் நிதி வழங்கி உள்ளார்.