என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு |
மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, விஜய்சேதுபதி, பிரகாஷ் ராஜ், அருண் விஜய், சிம்பு, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் என மிகப்பெரும் நட்சத்திரக்கூட்டமே நடித்துள்ள படம் - 'செக்கச் சிவந்த வானம்'.
லைகா புரொடக்ஷன்ஸுக்கு பர்ஸ்ட்காப்பி அடிப்படையில் மணிரத்னத்தின் 'மெட்ராஸ் டாக்கீஸ்' நிறுவனம் தயாரித்துக் கொடுத்துள்ள படம். செக்கச் சிவந்த வானம் படத்தின் இறுதிகட்ட வேலைகள் தற்போது பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இப்படத்தின் பாடல்களை மிக விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
படம் இன்னும் தணிக்கைக்கே அனுப்பப்படவில்லை. அதற்குள் இப்படத்தின் ரிலீஸ் தேதியை அதாவது செப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீஸ் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். தணிக்கைக்கு முன்னதாக படத்தின் வெளியீட்டு தேதியை லைகா அறிவிக்க என்ன காரணம்?
காலா படத்தை வாங்கி நஷ்டப்பட்ட விநியோகஸ்தர்கள் ரீபண்ட் கேட்டு பிரச்சனை செய்வதால், அவர்களை சமாதானப்படுத்துவதற்காகவே செக்கச் சிவந்த வானம் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.
அதாவது கோலமாவு கோகிலா, செக்கச் சிவந்த வானம் படங்களை குறைந்தவிலைக்கு தருவதாக ஏற்கனவே காலா பட விநியோகஸ்தர்களுக்கு வாக்கு கொடுக்கப்பட்டுள்ளது.