'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கில் வெளிவந்து பெரிய வரவேற்பையும், வெற்றியையும் பெற்ற படம் 'அத்தாரின்டிக்கி தாரேதி'. திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் பவன் கல்யாண், சமந்தா, நதியா நடித்து 2013ம் ஆண்டு வெளிவந்த படம். அப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சமீபத்தில் வாங்கியது.
தமிழ் ரீமேக்கை யார் இயக்கப் போவது, முக்கியக் கதாபாத்திரங்களில் யார் நடிக்கப் போகிறார்கள் என அந்தத் தகவல் வெளியான போதே பலரும் பேசிக் கொண்டார்கள். தற்போதைய தகவலின்படி பவன் கல்யாண் நடித்த கதாபாத்திரத்தில் சிம்புவும், நதியா நடித்த கதாபாத்திரத்தில் குஷ்புவும் நடிக்க உள்ளதாகத் தெரிகிறது. சுந்தர் .சி இந்தப் படத்தை இயக்க உள்ளாராம். படத்தின் நாயகி தேர்வும் நடந்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கோடீஸ்வர்ரான பவன் கல்யாண் அவருடைய தாத்தா பொம்மன் இரானியுடன் இத்தாலியில் வாழ்ந்து வருகிறார். ஆனால், மகள் நதியாவுடைய திருமண முடிவால் மகளைப் பிரிந்து வாடுகிறார். மகளுடன் மீண்டும் வாழ நினைத்தாலும் மகள் நதியா அதற்கு மறுக்கிறார். தாத்தாவின் ஆசையை நிறைவேற்ற பேரன் பவன் கல்யாண், இந்தியா வந்து நதியா வீட்டில் டிரைவர் வேலைக்குச் சேர்ந்து நதியாவின் மகள் சமந்தாவைக் காதலிக்க ஆரம்பிக்கிறார். அதன் பின் தாத்தா ஆசையை நிறைவேற்றினாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
சுந்தர் .சி இயக்கத்தில் 1996ம் ஆண்டு வெளிவந்த 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தின் கதையைப் போன்ற ஒரு கதைதான் 'அத்தாரின்டிக்கி தாரேதி'. இப்போது அதன் தமிழ் ரீமேக்கை இயக்க உள்ளார் சுந்தர் .சி. தெலுங்கில் வெளிவந்த சில சூப்பர் ஹிட் படங்களின் தமிழ் ரீமேக்கில் ஏற்கெனவே சிம்பு நடித்துள்ளார். இருந்தாலும் பவன் கல்யாண் நடிப்பிற்கு அவர் ஈடு கொடுப்பாரா என்பதுதான் சந்தேகம்.