அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
துப்பாக்கி, கத்தி படங்களைத்தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். இந்த படத்தின் வசன காட்சிகள் ஏற்கனவே முடிவடைந்து விட்ட நிலையில், இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இந்த படத்தில் விஜய்யின் ஓப்பனிங் பாடலை அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 5 நாட்களாக படமாக்கி வந்தனர். அந்த பாட லுக்கு ஷோபி மாஸ்டர் நடனம் அமைத்தார்.
இந்த பாடலின் படப்பிடிப்பு முடிந்ததுமே யூனிட்டார் அனைவரும் போட்டோ ஒன்று வெளியிட்டிருந்த நிலையில், தற்போது அந்த பாடலை யாரோ மர்ம நபர்கள் மொபைல் போனில் படம் பிடித்து அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் விஜய் நடன குழுவினருடன் ஆடும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதனால் சர்கார் படக்குழு கடும் அதிர்ச்சியடைந்துள்ளது.