நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 38வது செயற்குழு கூட்டம், சங்கத்திற்கு புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டட வளாகத்தில் நேற்று நடந்தது. சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார். பொருளாளர் கார்த்தி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், தி.மு.க., தலைவருமான கருணாநிதியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கேரள வெள்ள நிவாரண நிதிக்கு முதல் கட்டமாக 5 லட்சம் ரூபாய் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது. இதுதவிர புதிய கட்டட பணிகள், வரவிருக்கும் நடிகர் சங்கத் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் பூச்சி முருகன், நடிகர்கள் உதயா, நந்தா, ஸ்ரீமன், மனோபாலா, நளினி, லலிதாகுமாரி, குட்டி பத்மினி, பசுபதி, கோவை சரளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.