டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே ஒரு படம் 25 நாளைக் கடப்பதே பெரிய விஷயமாக போய்க் கொண்டிருக்கிறது. அதிலும் சில படங்களக்கு இரண்டு நாளைக் கடப்பதே அதைவிடப் பெரிய விஷயமாக இருக்கிறது. வெள்ளிக்கிழமை படம் வெளியானால், அடுத்து வரும் விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்தப் படம் வசூல் பெற்றுவிட்டால் ஓரளவிற்கு நஷ்டத்திலிருந்து தப்பித்துவிடும் நிலைமை இருக்கிறது.
இந்த 2018ம் வருடத்தில் சில படங்கள் 50 நாளைக் கடந்து ஓடியிருக்கின்றன. அது உண்மையிலேயே வெற்றிகரமாக ஓடியதா அல்லது ஓட்டப்பட்டதா என்பது சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களுக்குத்தான் தெரியும்.
இந்த வருடத்தில் இதுவரை “தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், குலேபகாவலி, மன்னர் வகையறா, கலகலப்பு 2, நாச்சியார், இரும்புத் திரை, காலா” ஆகிய படங்களைத் தொடர்ந்து 'டிக் டிக் டிக்' படமும் 50வது நாளைத் தொட்டிருக்கிறது. இந்த ஆண்டு வெளிவந்த படங்களில் 50 நாட்களைக் கடந்தும், லாபத்தையும் கொடுத்த படமாக 'டிக் டிக் டிக்' படம் இருந்தது என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.