அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
இயக்குனர் சன்தோஷ் பி ஜெயகுமார் அவருடைய முதல் படமான 'ஹரஹர மஹாதேவகி' படம் மூலம் பரபரப்பாகப் பேசப்பட்டார். அடுத்து இயக்கிய 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படம் மூலமும் அதைவிட அதிகம் பேசப்பட்டார்.
அவர் இயக்கிய முதல் இரண்டு படங்களும் 'ஏ' சர்டிபிகேட் வாங்கிய ஆபாசம் அதிகமாக இருந்த படங்கள். அதனால், அவரை ஆபாசப்பட இயக்குனர் என்று கூட அழைக்க ஆரம்பித்தார்கள். அந்தப் பெயரிலிருந்து விடுபட்டு குடும்பப் பாங்கான ஒரு படத்தை இயக்கி நல்ல பெயரை வாங்க வேண்டும் என்று அவர் இயக்கிய படம்தான் 'கஜினிகாந்த்'.
ஆர்யா, சாயிஷா மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்திற்கு நல்லவிதமான விமர்சனங்கள் வந்தும், குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம் என்று பலரும் சொன்ன பிறகும் தியேட்டர்களுக்கு எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை என்கிறார்கள். கடந்த திங்கள் கிழமையே படத்தின் வசூலும் குறைந்துவிட்டதாம். இன்றைய முன் பதிவுகளைப் பார்த்தால் ஒரு வரிசை மட்டும்தான் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடும்பத்துடன் ரசிக்கும்படமான இயக்குனர் எடுத்திருந்தாலும் ஏன் கூட்டம் வரவில்லை என்று விசாரித்ததற்கு இரண்டு காரணங்களைச் சொல்கிறார்கள். ஒன்று, ஆர்யா நடித்து கடந்த சில வருடங்களில் வெளிவந்த படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை.
இரண்டாவது, இயக்குனர் சன்தோஷ் பி ஜெயகுமார் படம் எடுத்தால் இப்படித்தான் இருக்கும் என அவருடைய முதல் இரண்டு படங்கள் நிரூபித்துள்ளன. ஒருவேளை இந்தப் படமும் அப்படி இருக்குமோ என பலர் வரவில்லை, அப்படி இல்லாத படத்தைப் பார்த்து என்ன செய்வது என அந்தப் படங்களைப் பார்த்து ரசித்தவர்களும் வரவில்லை என்கிறார்கள்.
இந்த 'கஜினிகாந்த்' ஓடவில்லை என்றால் மீண்டும் என்னை 'அந்த' மாதிரியான படங்களை எடுக்க வைத்துவிடாதீர்கள் என்று இயக்குனர் ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். அப்படி என்றால் அவருடைய அடுத்த படம் எப்படியிருக்குமோ...?.