ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி மறைவுக்கு மொழிகள் தாண்டி, இந்தியா முழுதும் இருந்து அரசியல் தலைவர்களும், பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர். நேரில் அஞ்சலி செலுத்த வர இயலாதவர்கள் சோஷியல் மீடியா மூலம் தங்களது இரங்கலை வெளிப்படுத்தினார்கள். மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லாலும், கருணாநிதியின் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஒரு மூத்த அரசியல்வாதி, திரையுலகின் ஜீனியஸ், சமூக நீதிக்காக போராடியவர், இதற்கெல்லாம் மேலாக சிறந்த மனிதநேயம் கொண்டவர் இன்று நம்முடன் இல்லை. தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதிய மிகவும் சக்தி வாய்ந்த ஒருவரை நமது தலைமுறை இழந்து விட்டது. கலைஞரின் குடும்பத்தினருக்கும் அவரை சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு" என கூறியுள்ளார் மோகன்லால்.