Advertisement

சிறப்புச்செய்திகள்

அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

போலீஸ் டார்ச்சர் : பெண் இயக்குனர்

07 ஆக, 2018 - 12:35 IST
எழுத்தின் அளவு:
Police-Torcher-says-Woman-Director

பிரபல ஆவணப் பட இயக்குனர் திவ்யபாரதி. இவர் இயக்கிய கக்கூஸ் என்ற ஆவணப்படம் பல விருதுகளைப் பெற்றது. இதையே திரைப்படமாக்கும் முயற்சியில் அவர் இருக்கிறார். தற்போது ஓகி புயல் பாதிப்பு பற்றி யாரும் வரவில்லை என்ற ஆவணப்படத்தை இயக்கி வருகிறார். இதன் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் தேசிய கொடி அவமானப்படுத்தப்படுவதாக கூறி போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள திவ்யபாரதி, கடந்த 3ந் தேதி முதல் கூடலூர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகிறார். கையெழுத்திட செல்லும்போது போலீசார் தன்னை டார்ச்சர் செய்வதாக திவ்யபாரதி குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:


முன்ஜாமீன் பெற்ற பின்னர் காவல்நிலையத்தில் விசாரணை எனும் பெயரில் காக்க வைக்கிறார்கள். எழுத்து பூர்வமான கேள்விக்கு ஆங்கிலத்தில் பதில் தரும்படி வற்புறுத்துகிறார்கள். இது சட்டத்திற்கு முரணானது. மேலும் நான் தங்கியிருக்கும் பகுதியில் உள்ள வீட்டை 24 மணி நேரமும் போலீசார் கண்காணிக்கிறார்கள். இதன் மூலம் என் பகுதி மக்களை பீதியடைய வைக்கிறார்கள். என்னை அங்கிருந்து மக்களே விரட்ட வேண்டும் என்கிற எண்ணத்தோடு செயல்படுகிறார்கள். காவல்துறையின் இந்த நடவடிக்கை என்னை மிகவும் பாதித்துள்ளது.


படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த முடியாத அளவிற்கு தொல்லை கொடுக்கிறார்கள். எனது புதிய ஆவணப் படமான 'யாரும் வரவில்லை' என்ற ஒகி புயல் பாதிப்புகள் தொடர்பான பணிகளை முடக்கும் வகையில் உள்ளது. எனது 'கக்கூஸ்' என்ற ஆவணப்படம் மற்ற மாநிலங்களில் ரிலீசான நிலையில், தமிழகத்தில் வெளியிட அனுமதி மறுக்கப்படுகிறது. இதற்காக பல்வேறு மிரட்டல்களும் வந்ததுள்ளது. நீதிமன்றம் மூலம் தடைகளை நீக்கி சமூகத்துக்கு எதிரான அடக்கு முறைகளை தொடர்ந்து போராடி வெளிப்படுத்துவேன்.


இவ்வாறு திவ்யபாரதி கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in