வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் |
அமர காவியம் படத்தில் நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யாவுடன் நடித்து பிரபலம் ஆனவர் மலையாள நடிகை மியா ஜார்ஜ். தொடர்ந்து இன்று நேற்று நாளை, வெற்றிவேல் படங்களில் நடித்தார். பெண்கள் சமூகத்தில் சந்திக்கும் பல்வேறு சங்கடங்கள் குறித்து மியா கூறியுள்ளதாவது:
பெண்கள், ஆண் ஆதிக்க சமூகத்தில் பல்வேறு சங்கடங்களை அனுபவித்து வருகின்றனர். பெண்கள், சினிமாவில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் தொல்லைகளை அனுபவித்துதான் வருகின்றனர். இப்படி பெண்களுக்கு எதிராக தொல்லை தரும் நபர்களை கடுமையான சட்டம் கொண்டு தண்டிக்க வேண்டும்.
பெண்கள் சினிமாவில் மோசமாக நடத்தப்படுகின்றனர் என்ற செய்தி, நாடு முழுவதும் பரவிக் கிடக்கிறது. அதனாலேயே, சினிமாவிற்கு வர பெண்கள் தயங்குகின்றனர். சினிமாவில் எல்லா இடங்களிலும் பெண்கள் மோசமாகத்தான் நடத்தப்படுகின்றனர் என எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. இருந்தாலும், சினிமா உலகில் என்னதான் நடக்கிறது என்பதை பெண்கள் நேரடியாக வந்து பார்த்து, அதன்பின், சினிமாத் துறைக்கு வருவதா வேண்டாமா என முடிவெடுக்கலாம். பிடிக்காமல், எதையும் பெண்கள் செய்யக் கூடாது.
மலையாள சினிமாவைப் பொறுத்த வரையில், பெண்களுக்கு என்று தனி சங்கம் உள்ளது. அது பெண்களுக்கு, சினிமாவில் ஏற்படும் இடைஞ்சல்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. சினிமா உலகைப் பொறுத்த வரையில், எல்லா இடங்களிலும் ஆண்களே முன்னிறுத்தப்படுகின்றனர். அந்த போக்கு மாற வேண்டும். சினிமா வியாபாரமும் கூட, கதாநாயகனை முன்னிறுத்தியே நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.