இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சமீபத்தில் தான் மலையாள நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்றார் நடிகர் மோகன்லால். அதையடுத்து நடைபெற்ற கூட்டத்தில் ஏற்கனவே நடிகை விவகாரத்தில் சிக்கி சங்கத்தில் இருந்து விலக்கப்பட்ட நடிகர் திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்துக்கொள்ள முடிவு எடுக்கப்பட்டது.. இதற்கு நடிகைகள் தரப்பில் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் சிலர் சங்கத்தை விட்டும் விலகினர்.
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட நடிகை வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றமும், ஒரு பெண் நீதிபதியும் நியமிக்கப்பட்ட வேண்டும் என மோகன்லால் வேண்டுகோள் வைத்தார். இதற்கு சங்கத்தில் உள்ள திலீப் ஆதரவாளர்களிடம் இருந்து எதிர்ப்புக்குரல் எழுந்துள்ளது.
திலீப் பக்கம் தவறு இல்லையென்றால் அவர் இதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை என கூறியுள்ள மோகன்லால், இப்படி தேவையற்ற பிரச்னைகளுக்கு எல்லாம் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தால், தலைவர் பொறுப்பை விட்டே தான் விலகிவிடுவேன் என எச்சரித்துள்ளார்.