Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தயாரிப்பாளர் சங்க திருட்டு விசிடி தடுப்பு பிரிவு தலைவர் மீது பல கோடி மோசடி புகார்

05 ஆக, 2018 - 14:28 IST
எழுத்தின் அளவு:
police-complaint-against-producer-counsil-anti-piracy-chief

தயாரிப்பாளர் சங்கத்திற்கு விஷால் தலைமையிலான புதிய அணி பொறுப்புக்கு வந்ததும், திருட்டு விசிடியை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருட்டு விசிடி தடுப்பு பிரிவு தொடங்கப்பட்டு, அதன் தொழில்நுட்ப பிரிவு தலைவராக சிவா நியமிக்கப்பட்டார். தற்போது அவர் மீது பலகோடி ரூபாய் மோசடி புகார் கூறப்பட்டுள்ளது.

நுங்கம்பாக்கம் என்ற படத்தின் இயக்குனர் ரமேஷ் செல்வன், தயாரிப்பாளர் சுப்பையா ஆகியோர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிவா மீது புகார் அளித்தனர். அவர்கள் கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:


ட்ரீம் வேல்டு சினிமாஸ் மற்றும் ஜெயா சுபா புரொடக்சன் சார்பாக நுங்கம்பாக்கம் என்ற திரைப்படத்தை தயாரித்தோம். 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் திருட்டு விசிடி பிரிவு தலைவராக பணியாற்றிய சிவா என்பவர் என்னிடம் தொடர்பு கொண்டு, முக்கிய பிரமுகரிடம் இருந்து 'நுங்கம்பாக்கம்' திரைப்படத்தை தனியார் நிறுவனத்துக்கு விற்று தரும்படி தனக்கு ஆணை வந்துள்ளதாக கூறி வேண்டிய பணிகள் செய்ய இருப்பதாக கூறினார்.


தொடர்ந்து, 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் தனியார் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையும் முடிந்து விட்டது. அதுதொடர்பான அங்கீகார கடிதத்தை கொடுத்தோம். பிப்ரவரி மாதம் ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவன ஏஜென்ட் பரத் ரெட்டி என்பவருடன் பேச வைத்து 2 கோடியே 20 லட்சத்துக்கு விற்பனையை உறுதி செய்தார்.


இறுதியாக ஜூலை 26ம் தேதி தொடர்பு கொண்டு தனியார் நிறுவனம் படத்திற்கு பணம் கொடுக்க தயாராக இருக்கின்றனர் என்று கூறி 5 லட்சம் உடனே தர வேண்டும். கொடுத்தால் ஜூலை 31ம் தேதி அன்று 1 கோடி பேங்க் அக்கவுண்டிற்கு வந்து விடும் என்று கூறினார். என்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்று கூறியதும், பின்பு என்னை நேரில் சந்தித்து எனக்காக 3 லட்சம் அவரே தருவதாகவும், 2 லட்சத்தை மட்டும் பேங்கில் போட்டால் போதும் என கூறியதால் நான் சிவராமன் என்ற பெயருக்கு 2 லட்சம் பணத்தை இரண்டு தடவையாக செலுத்தினேன்.


அதன்பிறகு ஜூலை 31ம் தேதி சிவாவை தொடர்பு கொண்டபோது அவருடைய மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது கடந்த 1ம் தேதி தயாரிப்பாளர் சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. திருட்டு விசிடி பிரிவு மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பெயரை பயன்படுத்தி பல பேரிடம் சிவா பலகோடி மோசடி செய்ததாகவும், எங்களுக்கு வர வேண்டிய 1 கோடியும் அவருடைய பேங்க் அக்கவுண்டிற்கு வந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே, அவருக்கு சொந்தமான நிறுவன வங்கி கணக்கை சோதனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளனர். இந்த புதிய குற்றச்சாட்டால் தயாரிப்பளார் சங்க நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in