பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தயாரிப்பாளர் சங்கத்திற்கு விஷால் தலைமையிலான புதிய அணி பொறுப்புக்கு வந்ததும், திருட்டு விசிடியை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருட்டு விசிடி தடுப்பு பிரிவு தொடங்கப்பட்டு, அதன் தொழில்நுட்ப பிரிவு தலைவராக சிவா நியமிக்கப்பட்டார். தற்போது அவர் மீது பலகோடி ரூபாய் மோசடி புகார் கூறப்பட்டுள்ளது.
நுங்கம்பாக்கம் என்ற படத்தின் இயக்குனர் ரமேஷ் செல்வன், தயாரிப்பாளர் சுப்பையா ஆகியோர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிவா மீது புகார் அளித்தனர். அவர்கள் கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
ட்ரீம் வேல்டு சினிமாஸ் மற்றும் ஜெயா சுபா புரொடக்சன் சார்பாக நுங்கம்பாக்கம் என்ற திரைப்படத்தை தயாரித்தோம். 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் திருட்டு விசிடி பிரிவு தலைவராக பணியாற்றிய சிவா என்பவர் என்னிடம் தொடர்பு கொண்டு, முக்கிய பிரமுகரிடம் இருந்து 'நுங்கம்பாக்கம்' திரைப்படத்தை தனியார் நிறுவனத்துக்கு விற்று தரும்படி தனக்கு ஆணை வந்துள்ளதாக கூறி வேண்டிய பணிகள் செய்ய இருப்பதாக கூறினார்.
தொடர்ந்து, 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் தனியார் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையும் முடிந்து விட்டது. அதுதொடர்பான அங்கீகார கடிதத்தை கொடுத்தோம். பிப்ரவரி மாதம் ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவன ஏஜென்ட் பரத் ரெட்டி என்பவருடன் பேச வைத்து 2 கோடியே 20 லட்சத்துக்கு விற்பனையை உறுதி செய்தார்.
இறுதியாக ஜூலை 26ம் தேதி தொடர்பு கொண்டு தனியார் நிறுவனம் படத்திற்கு பணம் கொடுக்க தயாராக இருக்கின்றனர் என்று கூறி 5 லட்சம் உடனே தர வேண்டும். கொடுத்தால் ஜூலை 31ம் தேதி அன்று 1 கோடி பேங்க் அக்கவுண்டிற்கு வந்து விடும் என்று கூறினார். என்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்று கூறியதும், பின்பு என்னை நேரில் சந்தித்து எனக்காக 3 லட்சம் அவரே தருவதாகவும், 2 லட்சத்தை மட்டும் பேங்கில் போட்டால் போதும் என கூறியதால் நான் சிவராமன் என்ற பெயருக்கு 2 லட்சம் பணத்தை இரண்டு தடவையாக செலுத்தினேன்.
அதன்பிறகு ஜூலை 31ம் தேதி சிவாவை தொடர்பு கொண்டபோது அவருடைய மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது கடந்த 1ம் தேதி தயாரிப்பாளர் சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. திருட்டு விசிடி பிரிவு மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பெயரை பயன்படுத்தி பல பேரிடம் சிவா பலகோடி மோசடி செய்ததாகவும், எங்களுக்கு வர வேண்டிய 1 கோடியும் அவருடைய பேங்க் அக்கவுண்டிற்கு வந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே, அவருக்கு சொந்தமான நிறுவன வங்கி கணக்கை சோதனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளனர். இந்த புதிய குற்றச்சாட்டால் தயாரிப்பளார் சங்க நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.