ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிப்பு, இயக்கம் என பிஸியாக இருக்கிறார் சமுத்திரகனி. சில படங்களில் கேரக்டர் ரோலிலும், ஆண்தேவதை, வெள்ளையானை உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.
சமுத்திரகனியும், ஜெயங்கொண்டான், இவன் தந்திரன், பூமராங் படங்களின் இயக்குநர் ஆர்.கண்ணனும் உதவி இயக்குனர்களாக இருந்தபோதே நெருக்கமான நண்பர்களாம். அந்தவகையில், கண்ணன், இயக்குநர் மனோபாலாவிடம் உதவி இயக்குனராக இருந்தபோது கால் உடைந்து விட்டதாம்.
உதவி இயக்குனராக வேலை செய்த அலுவலகம் இருக்கும் மூன்றாவது மாடிக்கு செல்ல முடியாமல் இருந்திருக்கிறார் கண்ணன். அப்போது அதே பில்டிங்கின் தரைதளத்தில் உள்ள ஒரு சினிமா கம்பெனியில் உதவி இயக்குனராக இருந்த சமுத்திரகனி தான், அவரது கால் சரியாகும் வரை தினமும் மூன்று மாடிக்கு அவரை தூக்கி கொண்டு விடுவது. பின்னர் மாலையில் கீழே இறக்கி விடுவது என உதவி செய்திருக்கிறார்.
இதை சென்னையில் நடைபெற்ற பூமராங் படத்தின் ஆடியோ விழாவில் சமுத்திரகனி நினைவுகூர்ந்தபோது, அதைக்கேட்ட கண்ணன் நெகிழ்ந்து போனார்.