'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் |
சினிமா, அரசியல் இரண்டிலும் பயணித்து வரும் கமல்ஹாசன், இந்தியன் 2-விற்கு பிறகு சினிமா பயணத்தை குறைத்து விடுவார் என தெரிகிறது. இருப்பினும் ஏதோ ஒரு வகையில் சினிமாவில் தனது பங்களிப்பு இருந்து கொண்டேயிருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் கமல். அவரது ராஜ்கமல் பிலிம்ஸ் தொடர்ந்து படங்கள் தயாரிக்கும் என தெரிகிறது.
இந்நிலையில், சென்னையில் உலகதரத்தில் ஒரு திரைப்பட பள்ளி தொடங்க வேண்டும் என்பது கமலின் கனவாக இருந்து வருகிறது. இதுகுறித்து அவர் கூறுகையில், சினிமா மூலம் அற்புதமான கதைகளை சொல்ல ஆயிரமாயிரம் கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல பயிற்சி கொடுக்கும் ஒரு தரமான சினிமா தொழில்நுட்ப பள்ளியை சென்னையில் ஆரம்பிக்க வேண்டும் என்பது எனது விருப்பமாக உள்ளது. அதில் நான் ஆசிரியராக இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. அதற்கான சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்றே விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.