தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'பருத்தி வீரன்' முத்தழகு கதாபாத்திரத்தை தமிழ் சினிமாவில் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்பட்ட கதாநாயகி கதாபாத்திரங்களில் டாப் 10 பட்டியலில் முத்தழகு கதாபாத்திரத்திற்கும் நிச்சயம் இடம் உண்டு. அந்தக் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து தேசிய விருதையும் பெற்றவர் பிரியாமணி. அதன்பின் தமிழ் சினிமாவில் அவர் எதிர்பார்த்த கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை என்பதால் தமிழில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.
கடந்த வருடம் அவரது காதலர் முஸ்தபா ராஜ்-ஐ திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என டிவி ஷோக்களில் நடுவராகவும் பணியாற்றி வந்தார். சில கன்னட, மலையாளப் படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
இதனிடையே, பிரியா மணி அவருடைய டுவிட்டர் பக்கத்தில் ,“உங்கள் அனைவருக்கும் ஒரு சுவாரசியமான, மகிழ்ச்சியான ஒன்று காத்திருக்கிறது. அதை நானும் என்னுடைய மிஸ்டர் முஸ்தபாராஜும் விரைவில் சொல்கிறோம், காத்திருங்கள்,” எனப் பதிவிட்டுள்ளார்.
அதற்கு கன்னட நடிகை பருல் யாதவ், ஒரு குழந்தையின் புகைப்படத்தை பதிலாகப் போட்டுள்ளார். அதற்கு தன்னுடைய அன்பு முத்தங்களை பதிலாகக் கொடுத்திருக்கிறார் பிரியாமணி. தன்னுடைய தாய்மை பற்றிய அறிவிப்பைத்தான் சஸ்பென்ஸ் வைத்து பிரியாமணி வெளியிட உள்ளார் என்கிறார்கள்.